திம்மராய பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் திவ்யம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2020 11:09
மேட்டுப்பாளையம்: காரமடை அருகே உள்ள, திம்மராய பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காரமடை அடுத்த கே.புங்கம்பாளையத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திம்மராய பெருமாள் கோவில் உள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில், பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். நேற்று திருவோணம் நட்சத்திரத்தை அடுத்து, கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அடுத்து, கோவில் வளாகத்தில் அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடந்தது. கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக திம்மராய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருமண கோலத்தில் எழுந்தருளினார்.பல்வேறு வைபவ நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, அர்ச்சகர் விஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமாங்கல்யத்தை அணிவித்தார்.பின்பு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதைத்தொடர்ந்து கருட வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திம்மராய பெருமாள் எழுந்தருளினார். இவ்விழாவில் கோவில் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றனர்.