விருதுநகர் ராமர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2020 10:09
விருதுநகர்: விருதுநகர் ராமர் கோயில் வளாகத்தில் உள்ள பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
விருதுநகர் ராமர் கோயிலில் பிரமோற்ஸவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது, விழாவில் கோயில் வளாகத்தில் உள்ள பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. பிரம்மோற்ஸவ திருக்கல்யாணத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.