புரட்டாசி சனியன்று மாவிளக்கு ஏற்றினால் நினைத்தது நிறைவேறும். இந்த நேர்த்திக்கடனைச் செலுத்த திருப்பதி செல்லத் தேவையில்லை. புரட்டாசி சனியன்று காலையில் வீட்டை சுத்தப்படுத்தி பெருமாள் படம் வைத்து மாவிளக்கு ஏற்றலாம். அப்போது தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு நைவேத்யம் செய்து, வெங்கடேச ஸ்தோத்திரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் படிக்க வேண்டும். இதனால் வெங்கடேசப்பெருமாளே நம் வாசல் தேடி வருவதாக ஐதீகம்.