திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வன்மீகநாதர், நம்புதாளை நம்புஈஸ்வரர்,தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர் ஆகிய கோயில்களில் பிரதோஷ விழா நடந்தது. உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர்சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது.மூலவர் மங்களநாதருக்கும், நத்தி பகவானுக்கும் பால், பன்னீர், தயிர், திரவியப்பொடிகளால் 16 வகையான அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. சிவநாம அர்ச்சனை,பிரதோஷப் பாடல்களை பக்தர்கள் பாடினர்.