பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள சுற்று வட்ட கிராமங்களில் முளைப்பாரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அரியனேந்தலில் கிராமத்தில் மாலை 3:00 மணிக்கு முளைப்பாரியை ஊர்வலமாக பெண்கள் தலையில் சுமந்து சென்றனர். தொடர்ந்து முளைப்பாரி மேடையிலிருந்து சென்ற பாரிகள் அம்மன் கோயில் குளத்தில் கரைக்கப்பட்டன. கிராம தலைவர் ராமு, பரமக்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன், அரியனேந்தல் ஒன்றிய தலைவர் மணிமுத்து, துணைத் தலைவர் பாப்பா, சிவகுமார் உள்ளிட்ட கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் நயினார்கோவில், போகலூர், பரமக்குடி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் முளைப்பாரி விழாவை கிராம மக்கள் ஒயிலாட்டம், பெண்கள் கும்மி ஆடியும் கோலாகலமாகக் கொண்டாடினார்.