திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் அருகே ஆண்டவன்ஆசிரமத்தில் தேசிகன் சன்னதி அமைந்துள்ளது. வைணவர்களின் வடகலைப்பிரிவு குருவான நிகமாந்த மகாதேசிகனின்752வது அவதார தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு பூஜைகளும் விசேஷ திருமஞ்சனம் நடந்தது. திவான் பழனிவேல் பாண்டியன், திருப்புல்லாணி ரகுபதி, கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை ஆசிரம மேலாளர் ரகுவீரதயாள் செய்திருந்தார். அன்னதானம் நடந்தது.