* தர்மம் ஒன்றே பிறவிக்கடலை தாண்ட உதவும் தோணி. * வீண் பேசுவதோ கேட்பதோ கூடாது. * கடவுளுக்கு நைவேத்யமாக படைத்த உணவை உண்ணுங்கள். * தர்மம் இருக்குமிடத்தில் கடவுள் குடிகொண்டிருக்கிறார். * கடவுளின் திருநாமத்தை எப்போதும் ஜபியுங்கள். * தர்மவழியில் வாழ்வதே கல்வி கற்றதன் அடையாளம் * நல்ல வழியில் பணம் சம்பாதித்து பிறருக்கு உதவுங்கள். * அலை பாயும் மனதை அடக்கியாளக் கற்றுக் கொள்ளுங்கள். * ஒழுக்கத்தை உயிராக மதியுங்கள். * கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறாதீர்கள். * உண்மையை உணர்ந்தவர்கள் அடக்கமுடன் நடப்பர். * ஆசை எப்போதும் அறிவுக்கு எதிராகவே செயல்படுகிறது * கோபத்தை கைவிட்டவரை துன்பம் நெருங்குவதில்லை. * கவர்ச்சியைக் கண்டு மயங்குவது கூடாது. * உயிர் உள்ள வரை பிறவிக்குணம் நீங்குவதில்லை.