நவக்கிரகங்களில் ராகு, கேது ஆகிய கிரகங்களுக்கு தனி கிழமைகள் கிடையாது. எனவே, தினமும் ஒன்றரை மணி நேரம் இவர்களுக்காக ஒதுக்கப்பட்டு ராகுகாலம், எமகண்டம் எனப்படுகிறது. கேதுவுக்குரிய நேரம் எமகண்டம். இரு கிரகங்களுமே அரக்க சுபாவம் கொண்டவர்கள் என்பதால், இந்த இரு காலங்களும் நல்லவை கிடையாது. ராகுவுக்கு அதிதேவதை துர்க்கை என்பதால், ராகுதோஷம் உள்ளவர்கள் துர்க்கையை ராகுவேளையில் வழிபடுவது வழக்கில் உள்ளது.