புதன் தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில், சீர்காழி அருகில் உள்ளது. இங்குள்ள அகோர மூர்த்தி சன்னிதி சிறப்பு மிக்கது. மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவன் முகத்திலிருந்து தோன்றியவர் இவர். இவரது வீரக் கோலம் காண்போரை மெய்சிலிர்க்க செய்யும். சிவனின் 64 வித வடிவங்களில் அகோரமூர்த்தி 43வது கோலமாகும். அகோரம் என்றால் கடுமையான வார்த்தை இல்லை. ‘கோரம்’ என்றால் தான் ‘அசுத்தமான முகம்’ என்று பொருள். அகோரம் என்றால் ‘அழகான முகம்’ என அர்த்தம். சரணடைந்தவர்களைக் காப்பதில் இவருக்கு நிகர் இவரே என்பதால் அகோரமூர்த்தி எனப்படுகிறார். மூலவர், உற்சவர் இருவருமே இடது காலை முன் வைத்து, வலக்காலை அடியெடுத்து வைப்பது போல் தன் நடையழகைக் காட்டும் விதமாக சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஞாயிறு இரவு 12:00 மணிக்கும் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.