* சோம்பலுடன் வேலை செய்ய விரும்பாதவர்கள், சாப்பிடவும் விரும்பாது இருக்கட்டும். * நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விட மாட்டான். * நல்ல மரத்தில் கெட்ட கனிகளையும், கெட்ட மரத்தில் நல்ல கனிகளையும் எதிர்பார்ப்பது மூடத்தனம். * வாக்குவாதத்தால் கேட்பவர்களின் புத்தி தடுமாறும். * மண்ணால் ஆன பானை மீண்டும் மண்ணாவது போல ஆண்டவர் கொடுத்த உயிர் மீண்டும் அவரிடமே சேரும். * வானமும், பூமியும் அழிந்து போகும். ஆனால் சத்தியம் அழியாமல் இருக்கும். * மனிதனுக்காகவே ஓய்வு உண்டாக்கப்பட்டிருக்கிறதே தவிர, ஓய்விற்காக மனிதன் உண்டாக்கப்படவில்லை. * அறிவாளிக்கு திரும்பிய பக்கமெல்லாம் ஞானம் கிடைக்கும். * முட்டாளுக்கு உலகம் முழுதும் தேடினாலும் ஞானம் கிடைக்காது. * கற்புள்ள பெண்கள் கணவருக்கு கிரீடத்தைப் போன்றவர்கள். பைபிள்