பதிவு செய்த நாள்
17
அக்
2020
08:10
சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர்கோவிலில், நவராத்திரி பெருவிழா, இன்று துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது. தினமும் மாலை, 6:30 மணிக்கு, அம்பிகையின் சிறப்புகளை விளக்கும் சொற்பொழிவுகள் நடக்கின்றன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரங்களில், கொலு வீற்றிருக்கும் கற்பகாம்பாளுக்கு, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், திருமுறை பாடல்களோடு தீபாராதனையும் நடைபெறவுள்ளது.