சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் இன்று காலை நடைபெற்ற குலுக்கல் தேர்வில் சபரிமலை மற்றும் மாளிகைபுரம் மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சபரிமலையில் எல்லா கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டுக்கு மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவார்கள். திருவிதாங்கூர் தேவசம் போர்டு நேர்முகத்தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுபவார். ஒருவர் சன்னிதானத்தில் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்படுவது வழக்கம் . அதன்படி வரும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் பொறுப்பேற்க வேண்டிய மேல்சாந்திகள் தேர்வு இன்று காலை நடைபெற்றது.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தலைமையில் நடைபெற்ற குழுக்கள் தேர்வில் சபரிமலைக்கு ஜெயராஜ் போற்றியும் மாளிகை புரத்துக்கு ரெதிக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். கார்த்திகை ஒன்றாம் தேதி பொறுப்பேற்கும் இவர்கள் ஒரு ஆண்டுகாலம் சபரிமலையில் தங்கி இருந்து பூஜைகள் செய்ய வேண்டும். சபரிமலையில் இன்று முதல் ஐப்பசி மாத பூஜைகள் நடைபெற்று வருகிறது. 21ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். ஆன்லைனில் முன்பதிவு மூலம் தினமும் 250 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.