நடுவீரப்பட்டு பாதாளகாளி, பிரத்தியங்காரதேவி கோவிலில் நிகும்பலாயாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2020 01:10
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு நரியன்ஓடை கரையில் உள்ள பாதாளகாளி மற்றும் பிரத்தியங்காரதேவி கோவிலில் புரட்டாசி மாதஅமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடந்தது.
இதையொட்டி நேற்று மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் கலசம் ஸ்தாபனம் செய்து, யாக வேள்விகள் துவங்கின. மதியம் 1:30 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல்கள் கொட்டப்பட்டு நிகும்பலாயாகம் நடந்தது.பின்னர், மகா பூர்ணாஹூதி முடிந்து, யாகவேள்வியில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து பிரத்தியங்கராதேவிக்கு கலச அபிேஷகம், மதியம் 2:00 மணிக்கு பாதாள காளிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள், 2:15 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.பூஜை ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.