மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே தென்பொன்முடி, சத்யா காலனியில் நாகம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பொங்கல் வைபவம் விழா நடந்தது. நாகம்மனுக்கு திருமஞ்சள், பால், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.