புதுச்சேரி : புதுச்சேரியில் சத சண்டீ மகா ஹோமம் இன்று துவங்குகிறது.புதுச்சேரியில் முதல் முறையாக தொடர்ந்து 10 நாட்களுக்கு நடக்கும் சத சண்டீ மகா ஹோமத்துக்கு, புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதியினர் ஏற்பாடு செய்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் மகா சத சண்டீ ஹோமம் இன்று துவங்கி, வரும் 26ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடக்கிறது.தினசரி காலை 8:00 மணிக்கு துவங்கி, மதியம் 12:00 மணி வரை ஹோமமும், தொடர்ந்து 12:00 மணியில் இருந்து, 12:30 மணிக்குள் பூர்ணாஹூதியும் நடக்கிறது.உலக மக்கள் அனைவரின் நலம் வேண்டி நடத்தப்படும் இந்த மகா ஹோமத்தில் புதுச்சேரி மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என, புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி அழைப்பு விடுத்துள்ளது. தொடர்புக்கு 95665 56548 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.