பதிவு செய்த நாள்
20
அக்
2020
10:10
வடவள்ளி: குரும்பபாளையத்தில் உள்ள, ஆகர்ஷன ஸ்ரீ சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
வேடப்பட்டி அடுத்த குரும்பபாளையத்தில், பிரபஞ்ச ஆகர்ஷன ஸ்ரீ சாய்பாபா கோவில் உள்ளது. இக் கோவிலின் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் துவங்கியது. அதன்பின், நவகோள் வேள்வி, திருமகள் வழிபாடு, நிறைவேள்வி, தீபாராதனை, கோபுர கலசம் வைத்தல், ஸ்ரீ ஆகர்சன பாபா திருவுருவ சிலை பிரதிஷ்டை செய்தல், முதல்கால வேள்வி, பூர்ணாஹுதி நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி, நாடி சந்தானம், முழு நிறை வேள்வி, திருக்குடங்கள் உலா வருதல் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, அவிநாசி ஆதினம் காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில், கோபுர கலசத்திற்கும், ஆதர்சன பாபா மூல திருமேனிக்கும், அதிஷ்டான மகா கும்பாபிஷேகம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்து, பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில், மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.