பதிவு செய்த நாள்
20
அக்
2020
10:10
தொண்டாமுத்தூர்: புதுப்பாளையத்தில், பொதுமக்கள் சார்பில், காளி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் நவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் பத்து நாட்கள் தசரா விழா கொண்டாடுகின்றனர். இந்நிலையில், தொண்டாமுத்தூர் அடுத்த புதுப்பாளையத்தில், பொதுமக்கள் சார்பில், நவராத்திரி விழாவையொட்டி, காளி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், இங்கு மட்டுமே காளி சிலை பிரதிஷ்டை செய்து, நவராத்திரி விழா கொண்டாடப்படுவதால், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள், இங்கு வந்து காளியை தரிசித்து செல்கின்றனர். நவராத்திரியின் முதல் நாளில், காலை, 5:00 மணிக்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூன்றாம் நாளான நேற்று, காலையும், மாலையும் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவின் இறுதி நாளான விஜயதசமி அன்று, காளி சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நொய்யல் ஆற்றில் விமர்சனம் செய்யப்பட உள்ளது.