பதிவு செய்த நாள்
20
அக்
2020
04:10
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகரில் கோவில் மற்றும் வீடுகளில் கொலு வைத்து, நவராத்திரி விழாவை கொண்டாடி வருகின்றனர். மேட்டுப்பாளையம் சுப்பம்மாள் லே அவுட்டில், நாகேஸ்வரன், சொர்ண தம்பதியர் வீட்டில் கொலு வைத்துள்ளனர். இவர்கள் மண், பிளாஸ்ட் ஆப் பாரிஸ், பீங்கான்,கல், சோப் ஆகியவற்றில் செய்த சுவாமி சிலைகள் வைத்துள்ளனர். இதுகுறித்து நாகேஸ்வரன் கூறியதாவது:
மஸ்கட்டில் வேலை செய்தபோது, 1997 ல் இருந்து தொடர்ச்சியாக, 30 ஆண்டுகள், அங்கு வீட்டில் கொலு வைத்து வந்தேன். அங்கிருந்தவர்களை அழைத்து, ஒவ்வொரு நாளும் பூஜை செய்து, அவர்களுக்கு பிரசாதம் வழங்கினோம். மேட்டுப்பாளையம் வந்த பிறகு, கடந்த சில ஆண்டுகளாக, வீட்டில் கொலு வைத்து, சுற்றியுள்ளவர்களை அழைத்து பூஜை செய்து பிரசாதம் வழங்கி வந்தோம். இந்தாண்டு வீட்டில் கொலு வைத்துள்ளோம். கொரோனா பிரச்னையால், சுற்றியுள்ள அனைவரையும், ஒரே நேரத்தில் அழைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் இரண்டு குடும்பத்தினரை அழைத்து, கொலுவில் வைத்துள்ள அனைத்து சுவாமி சிலைகளுக்கும், சிறப்பு பூஜை செய்து, பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்திய பாரம்பரிய கலாச்சாரத்தை, இளைய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க, இது மாதிரியான விழாக்களை வீடுகளில் கட்டாயம் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.