திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆறாம் நாள் நவராத்திரி விழாவில் ஆண்டாள் அலங்காரத்தில் பச்சையம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியில், சுவாமி தரிசனம் செய்தனர்.