ஆனைமலை: மாசாணியம்மன் கோவிலில், 42 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலாகியது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, 22 நிரந்தர உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த், ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தனர். நிரந்தர உண்டியல்களில், 42 லட்சத்து, 27 ஆயிரத்து, 211 ரூபாயும்; தங்கம், 218 கிராமும்; வெள்ளி, 443 கிராமும் இருந்தது.