பதிவு செய்த நாள்
23
அக்
2020
03:10
திருவண்ணாமலை : யோகி ராம்சுரத்குமார் ஆஷ்ரமத்தில்,கொரோனா சூழ்நிலையில் கூட்டம் கூடக் கூடாது என்பதற்காக, இந்த ஆண்டு, எளிமையாக, மூன்று அடுக்குத் தட்டுகள் மட்டுமே வைக்கப் பட்டிருக்கின்றன.முதல் அடுக்குப் படிகளில் மகாத்மாக்களும்,இரண்டாவது ஐந்து அடுக்குப் படிகளில் அம்பாள்,சிவா,விஷ்ணு முர்த்திகளும், மூன்றாவது தனிப்படியில், தினம் அலங்காரம் செய்யப்படும் அம்மன் மூர்த்தியும் வைக்கப்பட்டுள்ளன. கொலுவீற்றிருக்கும் அம்மனுக்கு தினம் தினம் ஒரு அலங்காரம் செய்யப் படுகிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் அலங்காரமும்,அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியின் அலங்காரமும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியின் அலங்காரமும் செய்யப் படும். தினமும் விடியற்காலை 4மணிக்கு லலிதா சகஸ்ரநாம குங்குமார்ச்சனை செய்யப்பட்டு,அயிகிரி நந்தினி ஸ்தோத்திரமும், லலிதா நவரத்தின மா லை போன்ற பாடல்களும்,பக்தர்களின் எல்லா வித நலங்களுக்காக பாடப்பட்டு,காலையிலும்,மாலையிலும் அம்பாளுக்கும், பகவானுக்கும் விசேஷ ஆரத்தி செய்யப்படுகிறது.