திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. நவராத்திரி விழாவில் உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வெள்ளி வில், அம்புடன், தங்க குதிரை வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளுவர். அங்குள்ள வன்னி மரத்தடியில் வில், அம்பு வைத்து திரவிய அபிஷேகங்கள், விக்னேஷ்வர பூஜை, வர்ண பூஜை, எட்டு திக்குகளிலும் பலி பூஜை முடிந்து சுவாமியின் பிரதிநிதியான சிவாச்சாரியாரிடம் வில், அம்பு வழங்கப்படும். அவர் நான்கு திசைகளிலும் அம்பு எய்வார். இந்தாண்டு கொரோனாவால் கோயிலுக்குள் இந்நிகழ்ச்சி நடந்தது.மேலுார்கஸ்துாரிபாய் நகரில் மகிஷாசுரனை வதம் செய்யும் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. மேலுார் சிவன் கோயிலில் இருந்து காமாட்சி அம்பாள் நேற்று குதிரை வாகனத்தில் மகர்நம் பொட்டலுக்கு சென்றார். அங்கு சிவாச்சாரியார் தட்சிணாமூர்த்தி மற்றும் நிர்வாக அதிகாரி பாலசரவணன் தலைமையில் மகிஷாசுரனை வதம் செய்தனர்.