பதிவு செய்த நாள்
27
அக்
2020
12:10
சிவகாசி : வெம்பக்கோட்டை கொங்கன்குளம் கண்ணபிரான் திருக்கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதை யொட்டி முதல் நாள் மாலை 4:00 மணிக்கு மஹா சங்கல்பம், புண்யாஹவாசனம், பகவத் பிரார்த்தனை மற்றும் விசேஷ பூஜை நடந்தது. நேற்று காலையில் புண்யாஹவாசனம், காலை பூஜை, அக்தி ஆராதனம், உக்த ஹோமம் நடந்தது. இைத தொடர்ந்து காலை 9:40 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், ஊர் நாட்டாண்மை பெருமாள்சாமி, ஒன்றிய கவுன்சிலர் அழகர்சாமி, முன்னாள் தலைவர் சுப்புராஜ், சுப்பாலட்சுமி, அச்சுதக்கண்ணன் முன்னிலை வகித்தனர். பி.எஸ்.ஆர்., கல்விக்குழுமம் நிறுவனர் சோலைச்சாமி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் தக்கார் ரவிச்சந்திரன், சென்னை ஜெயா கல்விக்குழுமம் நிறுவனர் கனகராஜ், தலைமையாசிரியர்கள் பொன்னுச்சாமி, ராஜகோபால், டாக்டர் சரவணன் பங்கேற்றனர்.