பதிவு செய்த நாள்
27
அக்
2020
03:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 30ல் நடக்கும் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, அன்றைய தினம் மூன்று மணி நேரம் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. இது குறித்து, கோவில் இணை ஆணையர் ஞானசேகர் விடுத்துள்ள அறிக்கை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 30ல் அன்னாபிஷேகம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு அன்று மாலை, 3:00 மணி முதல், 6:00 மணி வரை கோவில் நடை சாத்தப்படும். 6:00 மணிக்கு மேல், சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். வரும், 31ல் அதிகாலை, 1:14 மணி முதல், நவ.,1ல் அதிகாலை, 12:57 மணி வரை, பவுர்ணமி திதி உள்ளது. கடந்த ஏழு மாதமாக, கொரோனா ஊரடங்கால், பவுர்ணமி கிரிவலத்துக்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், வரும் ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை நீக்கப்படுமா என, பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.