* இன்று செய்யும் நன்மைகளே நாளை நற்பலன் தரும். * எதுவும் தானாக நடப்பதில்லை.முயற்சித்தால் மட்டுமே கிடைக்கும். * தொழுகை இறைவனின் அருளைப் பொழியச் செய்யும். * எப்போதும் அடக்கமுடன் இருப்பவரே நற்குணம் கொண்டவர். * வயது அதிகரிக்க, அதிகரிக்க நற்செயல்களை அதிகரிக்கச் செய்பவரே சிறந்தவர். * உங்களை நல்லவர் என பக்கத்து வீட்டுக்காரன் சொல்வானேயானால் நீங்கள் நல்லவரே. * ஆசைகள், தேவைகளை குறைத்துக் கொண்டால் சுதந்திரமாக வாழலாம். * விதியை மாற்றும் சக்தி பிரார்த்தனைக்கு இருக்கிறது. * சொர்க்கத்தை அடைய விரும்பினால் பெற்றோரை சந்தோஷப்படுத்துங்கள். * தன்னை அறிந்த மனிதன் இறைவனை அறிந்தவன் ஆவான். * சுகபோக நோக்கத்துடன் சேவையில் ஈடுபட்டால் அது களங்கத்தை உண்டாக்கும். * ஒருபோதும் நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். * துவேசம் வேண்டாம். எல்லா உயிர்கள் மீதும் அன்பு காட்டுங்கள். – நபிகள் நாயகம்