ஒருசமயம் எகிப்திய மன்னரான முகவ்கிஸ் நல்லெண்ணத்துடன் மருத்துவர் ஒருவரை மதினாவிற்கு அனுப்பி வைத்தார். அவரது உதவி தேவைப்படாத நிலையிலும், மதினாவாசிகளுக்கு வைத்தியம் செய்யும்படி மருத்துவரிடம் தெரிவித்தார் நாயகம். இரண்டு மாதம் கடந்த போதிலும் வைத்தியம் பார்க்க யாரும் வரவில்லை. அந்நிய மண்ணைச் சேர்ந்தவர் என்பதால் தன்னிடம் யாரும் வைத்தியம் பார்க்கவில்லையோ என வருந்தினார் மருத்துவர். ‘‘மருத்துவரே! நீங்கள் தாய் நாட்டிற்கு திரும்புங்கள். இறையருளால் தங்களின் உதவி எங்களுக்குத் தேவைப்படவில்லை. பசித்த பின்னரே நாங்கள் உணவை கையில் தொடுவோம். அதுவும் குறைவாகவே... அதனால் நோய் எங்களை அதிகம் அண்டுவதில்லை’’ என தெரிவித்தார். வருந்திய மருத்துவர் ஆறுதல் அடைந்தார்.