பதிவு செய்த நாள்
20
நவ
2020
06:11
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் நிறையாக சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், கந்தசஷ்டி நிறைவு விழா நடந்தது. காலை 6:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், 9:00 மணிக்கு முருகப்பெருமான் சன்னதியில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, ஹோமம் பூர்ணாகுதி கடம் புறப்பாடாகி மூலவர் வள்ளி தேவசேனா முருகப்பெருமானுக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை அர்ச்சனை, உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி சிவானந்தவள்ளியிடம் வேல் வாங்கும் வைபவம், தொடர்ந்து கோவில் வளாகத்தில் அசுரர்களை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.