திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்: இன்று தேரோட்டம் ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2020 09:11
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று (நவ., 20) கந்த சஷ்டி சூரசம்ஹார லீலை நடைபெற்றது. இன்று தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மூலவர் முன்பு தயிர்சாதம் படைக்கப்பட்டு பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும். இன்று காலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது.