பதிவு செய்த நாள்
21
நவ
2020
03:11
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் கந்த சஷ்டி விழா, நேற்று புஷ்பாஞ்சலியுடன் நிறைவு பெற்றது. இணையதளம் மூலம் பக்தர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
திருத்தணி முருகன் கோவிலில், நடப்பாண்டிற்கான கந்த சஷ்டி விழா, கடந்த, 15ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மேலும், காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முகருக்கு தினமும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்து வந்தது. கொரோனா தொற்று காரணமாக கந்த சஷ்டியின் போது நடைபெறும் லட்சார்ச்சனை வைபவம் நிறுத்தப்பட்டது.விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை, 5:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முகப்பெருமானுக்கு, புஷ்பாஞ்சலி மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், பக்தர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாறாக கோவில் நிர்வாகம் இணையதளம் மற்றும் யு டியூப் மூலம் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இன்று காலை, 11:00 மணிக்கு, முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.