மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஐப்பசி கோலாட்ட உற்சவம் நவம்பா் 15ம் தேதி துவங்கியது. விழாவில் நவம்பா் 15 முதல் 18 ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் எழுந்தருளல் நடைபெற்றது. கோலாட்ட உற்ஸவம் நிறைவு நாளான நேற்று மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது.