திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவர் சன்னதியில், வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவர் சன்னதியில், வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் பைரவருக்கு அபிஷேக,ஆராதனைகள் நடந்தன. விழாவில் சந்தனக்காப்பில் வெள்ளி அங்கி அணிந்து பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.