பதிவு செய்த நாள்
24
நவ
2020
11:11
மதுரை : மேலூர் தாலுகா, தும்பைப்பட்டி, சிவாலயபுரம் கோமதி அம்பிகை சமேத சங்கர லிங்கம் சுவாமி, சங்கரநாராயணர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவார 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அர்ச்சனை சிறப்பு அலங்கார வழிபாடு அருள்மிகு ஸ்ரீ சங்கர லிங்கம் சுவாமிக்கு நடைபெற்றது.
நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், நாட்டில் நிலவும் கொரோனா நோயிலிருந்து விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது. சுவாமி சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தார். ரமேஷ் அய்யர், சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.