பழநி : பழநி முருகன் கோயில் உண்டியலில் 100 நாட்களில் ரூ. 2 கோடியே 61 லட்சத்து 53 ஆயிரம் காணிக்கையாக கிடைத்துள்ளது. பழநி முருகன் கோயிலுக்கு தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 100 நாளுக்கு பின் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது.இதில் ரூ. 2 கோடியே 61 லட்சத்து 53 ஆயிரத்து 480 பணம், தங்கம்- 757 கிராம், வெள்ளி -12,411 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் -202 கிடைத்துள்ளது. செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, அறநிலையத் துறை துணை ஆணையர் செந்தில்குமார், உதவி ஆணையர் அனிதா, ஆய்வாளர், வங்கிப் பணியாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். இன்று அரசு விடுமுறை காரணமாக உண்டியல் எண்ணிக்கை இல்லை.