தமிழ்நாட்டில் சரஸ்வதிக்கென்றே விசேஷமாக விளங்கும் தனிக்கோயில் கூத்தனூரில் உள்ள கலைமகள் கோயில்தான். பிரும்மதேவனை மணக்க, சிவபெருமானைக் குறித்து, தவமிருந்த தலமாக இது கூறப்படுகிறது. பத்மநாபபுர அரண்மனையில் அழகான சரஸ்வதி தேவி சிலை உள்ளது. நவராத்திரியில் இந்த விக்கிரஹத்தை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்வது, பெரிய விழாவாக நடைபெறுகிறது.