சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றின் தென்கரையில் வெட்டு வானம் என்ற தலத்தில் அமைந்துள்ளது எல்லையம்மன் திருக்கோயில். திருமணம், குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தங்கள் மனக் குறைகளை வேண்டி, இக்கோயிலின் இடதுபுறம் அம்பாளின் அம்சமாக அமைந்துள்ள வேப்பமரத்தைச் சுற்றி வந்து, மஞ்சள் தாலிக்கயிறும், மஞ்சள் தூளியும், கட்டினால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.