ராமேஸ்வரம் : நிவர் புயலால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்ததால், ரதவீதி வெறிச் சோடி காணப்பட்டது.
வங்க கடலில் உருவானநிவர் புயலால் தமிழகத்தில் சூறாவளியுடன் கனமழை பெய்யும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.இப்புயல் எச்சரிக்கையால், ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றினர். இதனால் கடந்த 3 நாட்களாக ராமேஸ்வரம் பகுதியில் மேகமூட்டமும், கடல் கொந்தளிப்பும் இருந்தது. இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்ததால், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், அக்னி தீர்த்த கடற்கரை, கோயில் ரதவீதி பக்தர்கள்இன்றி வெறிச் சோடி கிடந்தது.