திருவாடானை : திருவாடானை, தொண்டி பகுதியிலிருந்து சபரிமலைக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் செல்வார்கள்.
கார்த்திகை முதல் நாள் மாலை அணிந்து விரதம்இருந்து செல்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்றால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் செல்ல அனுமதிக்கபடுகின்றனர்.மேலும் கொரோனா இல்லை என்ற சான்றிதழும்கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கபட்டுள்ளது. இத்தகைய கெடுபிடிகளால் இப்பகுதியிலிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. இது குறித்து ஐயப்ப பக்தர் ராமன் கூறியதாவது:பொதுவாக சபரிமலைக்கு பெருவழிபாதை, நீலிமலை பாதை, புல்லுமேடு வழியாக பக்தர்கள் செல்வார்கள். இம் முறை சுப்பிரமணிய பாதை வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.கொரோனா கட்டுப்பாட்டால் இப்பகுதியில்இருந்து நுாறு பேர் மட்டுமே செல்கிறோம் என்றார்.