திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் இன்று (நவ.,29) மாலை 6:15 மணிக்கு கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை பட்டாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் நேற்று சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை உற்ஸவர் சன்னதியில் எழுந்தருளினர். கோவர்த்தனாம்பிகை அம்பாளிடமிருந்து பெறப்பட்ட நவரத்தின செங்கோல், சுவாமியின் பிரதிநிதியான திருவிழா நம்பியார் சிவாச்சார்யாரிடம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. தங்க குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜைக்கு பின்பு, சுவாமியின் கிரீடத்திற்கு அபிஷேகம் முடிந்து, சுவாமியின் சிரசில் சாத்துப்படி செய்யப்பட்டு, கரங்களில் செங்கோல், சேவல், மயில் கொடிகள் சேர்ப்பிக்கப்பட்டன.இன்று மாலை மலைமேல் மஹா தீபம் ஏற்றப்பட்டது. நாளை வரை பொதுமக்கள் மலைக்கு செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.