கூடலூர்: கூடலூர், சிவன்மலையில், மகா கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பாகவும், எளிமையாகவும் நடந்தது.
கூடலூர், நம்பாலகோட்டை சிவன்மலை கோயில் மகா கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி மாலை நடந்தது. கோயிலில் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு கோவில் கமிட்டி தலைவர் கேசவன் மகா தீபம் ஏற்றினார். பக்தர்கள் தீபத்தை வணங்கி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. கோவில் கமிட்டியினர் கூறுகையில், ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சிக்கு முன்பாக, பக்தர்களின் கிரிவல ஊர்வலம் நடைபெறும். நடப்பாண்டு கொரோனா தடுப்பு முன்னிச்சரிக்கை நடவடிக்கையாக, சிறப்பாக நடந்த நிகழ்ச்சியில் மிக குறைந்த பக்தர்கள் பங்கேற்றனர் என, கூறினர்.