பரமக்குடி : பரமக்குடி பெருமாள் கோயில்களில் நேற்று கார்த்திகை பாஞ்சராத்ர தீப விழா நடந்தது.பரமக்குடி சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஏகாந்த சேவையில் சிம்மாசனத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து சிறப்பு ேஹாமங்கள் நிறைவடைந்து, பெருமாள் வீதிவலம் வந்தார்.* எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள்ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வீதிவலம் வந்தார். அங்கு கோயில் முன்பு சொக்கப்பனை எரிக்கப்பட்டு, பின்னர் கோயிலில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.