திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே பாலமுருகன் கோவிலில் கார்த்திகை கிருத்திகை சிறப்பு பூஜை நடந்தது.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு கிராமத்தில் பாலமுருகன் கோவில் உள்ளது. கோவிலில் நேற்று முன்தினம் கார்த்திகை மாத கிருத்திகை சிறப்பு பூஜைகள் நடந்தது.அதனையொட்டி, முருகருக்கு பால், தயிர், விபூதி, உள்ளிட்ட திரவியங்களில் அபிேஷகம் நடந்தது. பின் வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.