கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி சங்காபிஷேக வழிபாடு நேற்று நடந்தது.அதனையொட்டி, காலை 5:00 மணியளவில் கோ பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு, 108 அகல் விளக்கேற்றி, அம்மையப்பர் கலச வழிபாடு, வேள்வி வழிபாடு நடந்தது.பொன் அரிசி, பொற்காசு, எலுமிச்சை பழம், பால் ஆகியவற்றுடன் இருந்த 108 சங்குகள் மூலம் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் நேரடியாக மூலவருக்கு பூஜை செய்தனர்.தொடர்ந்து மூலவருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருநாவுக்கரசர் நாயனார் உழவார திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.