பதிவு செய்த நாள்
02
டிச
2020
11:12
திருவொற்றியூர் : ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்வின் கடைசி நாளான நேற்று, தலைமை செயலர் உட்பட ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை, திருவொற்றி யூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இங்கு, ஆண்டு முழுதும், மூலவர் ஆதிபுரீஸ்வரர், கவசத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.ஆண்டின், கார்த்திகை மாதம், பவுர்ணமி தினத்தன்று கவசம் திறக்கப்பட்டு, மூன்று நாட்களுக்கு, புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.கையில் வழங்கினர்இவ்வாண்டு, நவ., 29ம் தேதி மாலை கவசம் திறக்கப்பட்டு, புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.ஆண்டுக்கொருமுறை மட்டும் நடைபெறும் இந்த அரிய நிகழ்வை காண, தமிழகம் முழுதும், லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவர். இம்முறை, கொரோனா பரவல் காரணமாக, அரசின் வழிகாட்டு நெறிமுறை படி, கவசம் திறப்பு நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.அதன்படி, முக கவசம், தனிமனித இடைவெளி, உடல் வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. வழக்கமாக நெற்றியில் வைத்து விடப்படும் புணுகு சாம்பிராணி தைல பிரசாதம், இம்முறை கையில் வழங்கப்பட்டன.
காத்திருக்க வேண்டும் கடைசி நாளான நேற்று, தலைமை செயலர் சண்முகம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, வேலுமணி, திருவேற்காடு கோவில் இணை கமிஷனர் லட்சுமணன், மயிலாப்பூர் கோவில் இணை கமிஷனர் காவேரி, வடபழநி கோவில் தக்கார் ஆதிமூலம், மாங்காடு கோவில் தக்கார் சீனிவாச முதலியார் உட்பட, ஏராளமானோர் பங்கேற்று, ஆதி புரீஸ்வரரை கவசமின்றி தரிசனம் செய்தனர்.நேற்றிரவு, அர்த்தஜாம பூஜைக்கு பின், ஆதிபுரீஸ்வரருக்கு மீண்டும் கவசம் அணிவிக்கப்பட்டது. இனி, ஆதிபுரீஸ்வரை கவசமின்றி தரிசிக்க, ஓராண்டு காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.திருக்கோவில் உதவி கமிஷனர் சித்ரா தேவி தலைமையில், 160க்கும் மேற்பட்ட போலீசார், 300 ஊழியர்கள் உட்பட, 500க்கும் மேற்பட்டோர், விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.