ஆண்டாள் நாச்சியார் கோவிலில் விஷ்ணு ஜோதி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2020 01:12
உடுமலை: உடுமலை, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், விஷ்ணு ஜோதி சிறப்பு பூஜை நடந்தது. உடுமலை, அருகே குறிஞ்சேரியில் ஆண்டாள் நாச்சியார் கோவில் உள்ளது. திருவண்ணாமலை ஜோதியை அடுத்து மறுநாள், பெருமாள் கோவில்களில் விஷ்ணு ஜோதி ஏற்றப்பட்டு, வழிபாடு நடக்கிறது.ஆண்டாள் நாச்சியார் கோவிலில், இந்த வழிபாடு நேற்று நடந்தது. சுவாமிகளுக்கு பால், பன்னீர், உட்பட 16 திரவியங்களில் சிறப்பு அபிேஷக அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் விதிமுறைகள் பின்பற்றி, வழிபட்டனர்.