பதிவு செய்த நாள்
02
டிச
2020
01:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பகவான் யோகி ராம்சுரத்குமாரின், 102வது ஜெயந்தி விழாவில் நேற்று, அவரது புதிய வெண்கல உருவ சிலை திறக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் உள்ள, யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில், பகவான் யோகி ராம்சுரத்குமாரின், 102வது ஜெயந்தி விழா, நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடந்த விழாவில், ஏகாதச ருத்ர பாராயணம், மகா அபிஷேகம் நடந்தது. பின்னர், அவரது உருவ சிலை மற்றும் சன்னதி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, அன்னதான கூடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட, பகவான் யோகி ராம்சுரத்குமார், பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போன்ற வெண்கல சிலை திறக்கப்பட்டது. விழாவில், சாதுக்கள் மற்றும் ஏழைகளுக்கு வஸ்திர தானம், அன்னதானம் அளிக்கப்பட்டது.