சூலுார்: சூலுார் வட்டார கோவில்களில் கார்த்திகை ஜோதியை ஒட்டி தீபம் ஏற்றப்பட்டது.சூலுார் வட்டார சிவாலயங்கள், அம்மன் கோவில்கள் மற்றும் கிராமக்கோவில்களில் நேற்று முன்தினம் கார்த்திகை ஜோதி திருவிழா கோலாகலமாக நடந்தது. சிவாலயங்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. சூலுார் சிவன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, கருட கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதேபோல், கிராமங்களில் உள்ள விநாயகர் மற்றும் குலதெய்வக்கோவில்களில் தீபம் ஏற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வழிபாடு செய்தனர்.கிருத்திகை மற்றும் பவுர்ணமி ஒரே நாளில் வந்ததால், அம்மன் மற்றும் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.