இங்கிலாந்தில் 1874ல் பிறந்தவர் ஹாரி கவுடினி. “தப்பிப்பதில் தலைவன்” என மக்களிடம் இவர் பெயர் பெற்றார். ‘‘என்னை எப்படி வேண்டுமானாலும் கயிறால் கட்டியோ, சங்கிலியால் பூட்டியோ, இருட்டறையில் அடைத்தோ வைத்தாலும் தப்பித்து விடுவேன்’’ என சவால் விடுத்தார். பலரும் பலவிதமாக முயற்சித்தும் ஹாரியிடம் தோற்றனர். இறுதியாக லண்டன் செய்தி நிறுவனம் ஒன்று விசேஷமான பூட்டை தயாரித்து விலங்கிட்டும் ஹாரி தப்பித்தார். ஆனால் 1926 அக்.31ல் மரணம் இவரைப் பூட்டியது. சாகும் முன் மனைவியிடம், ‘‘மரணத்தில் இருந்து தப்பிக்கும் வழி கிடைத்தால் நிச்சயம் உன்னைச் சந்திப்பேன்’’ என வாக்குறுதியளித்தார். அவளும் அதை நம்பி தங்களின் திருமண நாளன்று நிச்சயம் வருவார் என மனைவி காத்திருந்தாள். ஆனால் அவர் வரவில்லை. அவள் தன் டைரியில், “மரணத்தில் இருந்து தப்பிக்க ஹாரியாலும் முடியாது’’ என எழுதி வைத்தாள். யாராலும் தப்ப முடியாத ஒருவழிப்பாதை மரணம். ஆனால் ஆண்டவரை ‘மரணத்தை வென்ற மீட்பர்’ என்கிறோம். ஏனெனில் அவர் மரணத்தில் இருந்து தப்பித்தவர்.