அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் ராஜேந்திரச்சோழன் காலத்தில் இருந்து கொண்டாடப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் தை மாதம் திருவூடல் விழா நடந்துள்ளது. இது தவிர சித்திரை திருவிழா, ஆவணி மூலத் திருவிழா சிறப்பாக நடக்கிறது. இந்த விழாக்களை பஞ்ச பருவ விழாக்கள் என்பர்.