புதுச்சத்திரம்: பெரியப்பட்டு ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் கோவிலில், ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு திருமஞ்சனம் நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் கோவிலில், ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7.00 மணிக்கு பாண்டுரங்கர், ரகுமாயி, கருடாழ்வாருக்கு திருமஞ்சனம், இரவு 7.30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.