நாகர்கோவில்: புரெவி புயல் காரணமாக சபரிமலையில் காற்றின் வேகம் அதிகரித்தால் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புரெவி காரணமாக இன்று கேரளாவில் சூறாவளி வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து சபரிமலையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தனி அதிகாரி பிராந்தன்காணி தலைமையில் நடைபெற்றது. சூறாவளி வீசினால் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்களை அனுப்புவதில் கட்டுப் பாடுகள் ஏற்படுத்தவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் மரங்கள் முறிந்து விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்த உபகரணங்கள், ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.